கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.