அசாம் மாநிலம் துப்ரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அசாம் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் துப்ரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜேசிபி வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.