"மதி"யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!
Jul 11, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின்  பேச்சைக் கேட்க முடியாமல் கலைந்து சென்ற தொண்டர்களைப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர்கள் மீது மதிமுக குண்டர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். காலி சேர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருந்த வைகோ குறித்தும், கூட்டத்தில் மதுபோதையில் கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுகவின் மண்டலக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. சோர்ந்துவிட்ட தலைமை, கட்சியை வழிநடத்த ஆள் இல்லாத போக்கு, வாரிசு அரசியல் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் கட்சித் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்ட மதிமுகவினர் பெரும்பாலானோர் புறக்கணித்ததால் மண்டலக் கூட்டம் காத்து வாங்கியது. மண்டலக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கூட பங்கேற்காததைக் கண்டு அதிருப்தியிலிருந்த வைகோ, கூட்டம் முழுவதுமே ஒருவகை எரிச்சலுடனே காணப்பட்டார்.

ஒரு காலத்தில் வைகோவின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்த நிலையில், தற்போது அவரின் பேச்சைக் கேட்க முடியாமல் திரண்ட கூட்டமும் கலந்து செல்லக்கூடிய சூழல் தான் நிலவுகிறது. அதன் ஒரு பகுதியாகவே சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திலும் அமெரிக்கா தொடங்கி பாகிஸ்தான் வரை என இழு இழு என இழுத்துக் கொண்டிருந்த வைகோவின் பேச்சைக் கேட்க முடியாமல் கூடியிருந்த சில தொண்டர்களும் கலையத் தொடங்கினர்.

அவ்வாறு கலைந்து சென்ற தொண்டர்களின் பக்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கவனம் திரும்பியது. கூட்டம் முடிவதற்கு முன்பாகவே கலைந்து சென்ற தொண்டர்களையும், காலியாக இருந்த சேர்களையும் படம்பிடிப்பதைக் கண்ட வைகோ கடும் கோபத்திற்கு உள்ளானார்.

மூச்சைப் பிடித்து நான் இங்குப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலிச்சேர்களையா படம்பிடிக்கிறீர்கள் என ஆவேசமடைந்த வைகோ, பத்திரிகையாளர்களை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசினார்.

அதோடு காலிச்சேர்களை படம்பிடித்த கேமிராக்களை பிடுங்கி அதில் இருக்கும் ரீல்களை பிடிங்கி எரியுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். வைகோவின் எதிர்ப்பு காரணமாகப் பத்திரிகையாளர்கள் அமைதியாக வெளியேறிய போதும், அவர்களைத் தடுத்து நிறுத்தி மதுபோதையிலிருந்த மதிமுகவினர் கண்மூடித் தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மதிமுகவினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் விருதுநகர் செய்தியாளர் ஜெயராம் உட்பட பல்வேறு முன்னணித் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாழ்க்கையில் நீண்ட அனுபவம் கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இத்தகைய ஆணவப் போக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீது வைகோவின் ஏவுதலால் நடைபெற்ற இத்தகைய தாக்குதல் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சித் தொண்டர்களின் செயல்பாட்டிற்கு பல்வேறு பத்திரிகையாளர் மன்றங்களும், சங்கங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பத்திரிகை ஊடகங்களை மதிமுக என்றும் மதிக்கும் எனவும் சாத்தூரில் நடைபெற்ற நிகழ்வு வருந்தத்தக்கது எனவும் எனவும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனிப்பட்ட முறையிலும் கட்சி சார்பாகவும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Tags: Madhimaka MDMK members who lost their "Mathi": Attack on journalists"மதி"யிழந்த மதிமுகவினர்மதிமுக பொதுச்செயலாளர் வைகோதுரை வைகோpolitical news todaymdmktn political
ShareTweetSendShare
Previous Post

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

Next Post

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

Related News

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies