30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்
Oct 13, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

Web Desk by Web Desk
Jul 11, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆப்ரேஷன் அறம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

ஆப்ரேஷன் அறம், அகழி ஆகியவற்றின் மூலம் கோவை காவல்துறையினர் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் ஆந்திரா கர்நாடகா காவல் துறையினர் இணைந்து நீண்ட ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த மூன்று தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.

இதில் கைதாகி உள்ள அபூபக்கர் சித்திக்கை பொறுத்தவரை 5 வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார் என்று அவர் கூறினார்.

முகமது அலி பொறுத்தவரை ஏழு வழக்குகளில் தொடர்புடையவராக உள்ளார், இந்த இருவரையும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கைது செய்து உள்ளோம் எனக் கூறினார்.

டைலர் ராஜாவைப் பொறுத்தவரை நான்கு வழக்குகளில் தொடர்புடையவர் ஆக உள்ளார் இவரைக் கர்நாடக காவல்துறையினுடன் இணைந்து கைது செய்துள்ளோம் என்று கூறினார்.

சட்டப்படிதான் இவர்கள் மீது தீவிரவாத வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் மீண்டும் காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களில் டெய்லர் ராஜா மட்டும் தடை செய்யப்பட்ட அல் உமா அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர் என்றும், அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் உள்ளனர் என அவர் கூறினார்.

மேலும், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக விமர்சிக்கப்பட்ட நிகிதா வழக்குகள் குறித்த கேள்விக்குத் தமிழகத்தில் உள்ள ஒரு சில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது என அவர் கூறினார்.

தமிழ்நாடு காவல்துறை எந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் தேசிய ஆவண பதிப்பகத்தின் தரவுகளை வைத்துத் தெரிந்து கொள்ளலாம் என்றார்*

கண்டிப்பாக இந்த வழக்கில் பணியாற்றிய காவல் துறையினருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.

Tags: டிஜிபி சங்கர் ஜிவால்3 terrorists who were absconding for 30 years arrested through Operation Aram: DGP Shankar Jiwal
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசம் : முக்கிய போக்குவரத்தாக மாறி ரோப் கார் சேவை!

Next Post

உத்தரப்பிரதேசம் : காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

Related News

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு : நொடிப்பொழுதில் இடிந்து விழுந்த கட்டடங்கள்!

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies