சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்? : பயங்கரவாதத்திற்கு ஆதரவு சான்றுகளை வெளியிட்ட FATF!
Jul 12, 2025, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்? : பயங்கரவாதத்திற்கு ஆதரவு சான்றுகளை வெளியிட்ட FATF!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான சான்றுகளை நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத நிதி ஆபத்து மதிப்பீட்டில், ஆப்கானிஸ்தான், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைத் தவிர பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களிடமிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, பயங்கரவாத நிதி அபாயங்கள் குறித்த விரிவான புதுப்பிப்பு என்ற அறிக்கையைத் தயாரித்து,  நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ளது. ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் (Counter-Terrorism Committee)  பயங்கரவாத எதிர்ப்புக் குழுவும்  பிரான்ஸும்  தலைமையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில்,    இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

பயங்கரவாத குழுக்கள், தங்கள் தாக்குதல்களுக்கு நிதியளிக்கவும், திட்டமிடவும், செயல்படுத்தவும் இ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் சந்தைகள் மற்றும் FINTECH  சேவைகள் போன்ற அன்றாட டிஜிட்டல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த  புல்வாமா குண்டுவெடிப்பு மற்றும் 2022 ஆம்  ஆண்டு கோரக்நாத் கோவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கோள் காட்டி, பயங்கரவாதிகளால் டிஜிட்டல் தளங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும்  விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனங்களின்மீது, வெடிபொருட்கள் நிரப்பிய Maruti Suzuki Eeco (மாருதி சுசுகி ஈக்கோ) வாகனத்துடன் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் நடத்தப்பட்ட  மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும், தாக்கத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்ட  அலுமினியம் பவுடரும், அமேசான் இ-காமர்ஸ் தளம் மூலம் பயங்கரவாதிகளால் வாங்கப்பட்டுள்ளது என்று  இந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் VPNகளைப் பயன்படுத்தி கருத்தியல் ரீதியாகப் பயங்கரவாதத்தைத் தூண்டுவதையும், நிதி நடவடிக்கை பணிக்குழு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2022-ல்  இல் உத்தரப்பிரதேசத்தின் கோரக்நாத் கோவில் மீதான பயங்கரவாத தாக்குதலை விவரித்துள்ளது.

ஈராக்கில் இஸ்லாமிய அரசு மற்றும் லெவண்ட் (ISIL) பயங்கரவாத கொள்கையால்  மூளைச்சலவை செய்யப்பட்ட  ஒரு பயங்கரவாதி, கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்றும், அதற்காக,  PayPal மூலம் 44 தனித்தனி சர்வதேச பரிவர்த்தனைகளை நடத்தியுள்ளார் என்றும் அதன் மூலம் ISIL-க்கு ஆதரவாக சுமார் 7 லட்சம் ரூபாயை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அதீத வளர்ச்சி அடைந்துள்ள FINTECH  நிறுவனங்கள்  ஆன்லைன் கட்டண சேவைகளுக்குச் சலுகைகள் வழங்குகின்றன. மேலும், பெரும்பாலும் போலிக் கணக்குகள் மூலம் பரிமாற்றங்களைச் செய்யவும்  அனுமதிக்கின்றன.

கூடுதலாக, சில கட்டண வழிமுறைகள் content delivery network  எனப்படும் ஹோஸ்டிங் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையிலான பரிமாற்றாங்களில் பணத்தை அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களைத் தெளிவாக அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

எனவே,பயங்கரவாத ஆதரவாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும்,  திரள் நிதி (crowdfunding) பிரச்சாரத்தைத் தொடங்கி, ஆன்லைன் பேமெண்ட் வசதிகள் மூலம் அதிக அளவிலான நிதியைப் பெறுவதற்கும் பயங்கரவாதிகள் இத்தகைய ஆன்லைன் சேவைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல்,  பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளால் பிரச்சாரத்தைப் பரப்புவதற்கும், உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும், தூண்டுவதற்கும், தீவிரமயமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், சில சமயங்களில் நிதி திரட்டுவதற்கும் அதிகளவில் ஆன்லைன் வீடியோ கேம்கள் மற்றும் கேமிங் செயலிகள்  பயன்படுத்தப்படுவதாகவும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், சில பயங்கரவாத அமைப்புகள் பல தேசிய அரசிடம் இருந்து  நிதி மற்றும் பிற வகையான உதவிகளைத் தொடர்ந்து பெற்றுவருகின்றன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு நிதியும் ஆயுதங்களும் வழங்கி ஆதரித்து வருகிறது என்றும்,உலகின் எங்குப் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் அதன் வேர் பாகிஸ்தானில் இருக்கும் என்றும் நீண்ட காலமாகவே இந்தியா கூறிவருகிறது. பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், புல்வாமா மற்றும் கோரக்நாத்   பயங்கரவாத தாக்குதல்களை  நிதி நடவடிக்கை பணிக்குழு  தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது,பாகிஸ்தான் மீதான இந்தியாவின் குற்றச் சாட்டுகளை  உறுதிப்படுத்துவதாக உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குத்  தனது கண்டனத்தைத் தெரிவித்த  நிதி நடவடிக்கை பணிக்குழு,  பயங்கரவாதிகளுக்கு நிதி ஆதரவு கிடைக்காமல் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்குச் சாத்தியமில்லை என்றும் வலியுறுத்தி இருந்தது. தற்போது நிதி நடவடிக்கை பணிக் குழு, தனது அறிக்கையின் மூலம் அதைச் சான்றுகளுடன் விரிவாக நிரூபித்துள்ளது.

Tags: பாகிஸ்தான்சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்pakistan news todayPakistan on the grey list?: FATF releases evidence of support for terrorismFATF
ShareTweetSendShare
Previous Post

ஓரங்கட்டப்பட்ட ஜி ஜின்பிங் : முடிவுக்கு வரும் வாழ்நாள் சீன அதிபர் ஆசை!

Next Post

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

Related News

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

ஓரங்கட்டப்பட்ட ஜி ஜின்பிங் : முடிவுக்கு வரும் வாழ்நாள் சீன அதிபர் ஆசை!

குழந்தை பெற சலுகைகளை வாரி வழங்கும் நாடுகள்!

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்? : பயங்கரவாதத்திற்கு ஆதரவு சான்றுகளை வெளியிட்ட FATF!

நவீன் மரணம் : காவல்துறைக்கு அசிங்கம் இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

சாலை அமைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்!

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஹேமராஜ் குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு!

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் – அஜித் தோவல் கணிப்பு!

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies