RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!
Jul 12, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடக மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சமி நில பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆயிரத்து 891 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் அரசால் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலம், தீர்வை நிலம், கண்டிசன் நிலம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டன.

அத்தகைய பஞ்சமி நிலங்களைப் பட்டியலின சமூகத்தினரைத் தவிர்த்து வேறு எந்த சமூகத்தினரும் உரிமை கோர முடியாத அளவிற்கு அந்த காலத்திலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்காகத் தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவையில் மட்டும் அத்தகைய நிலங்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை இயற்றத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தவறான தகவலை அளித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நான்காயிரம் ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவரது வாரிசுதாரர்களிடம் இருக்கிறதா என்ற ஆய்வு நடத்திய போது தான் அந்நிலங்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் இருப்பதே தெரியவந்துள்ளது.

எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சமி நிலைச்சட்டத்தை இயற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: tn news todayShocking information revealed in RTI: 10000 acres of Panchami land encroached uponRTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்000 ஏக்கர் பஞ்சமி நிலம்10tamil nadu news today
ShareTweetSendShare
Previous Post

விசாரணை வளையத்தில் DC : திருமலா மேலாளர் நவீன் கொலை செய்யப்பட்டாரா?

Next Post

திருப்பூர் : அரசுப் பள்ளியின் மொட்டை மாடியில் அமர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள்!

Related News

திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் 84 நாட்களுக்கு பின் மருத்துவ சேவை!

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

“SPARSH” மொபைல் வேன் பிரச்சாரம் சென்னையில் நிறைவு!

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

அடிப்படை வசதிகளை செய்யாமல், மக்களிடம் இருந்து வரியை மட்டும் திமுக அரசு வசூலிக்கிறது – ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகாலயாவின் முதல் நவீன வணிக வளாகம் திறப்பு!

மகாராஷ்டிரா : பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு – நூலிழையில் உயிர்தப்பிய அதிகாரிகள்!

அன்புமணி ஆதரவாளர்கள் மீது புகார்!

அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!

டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு!

டெல்லி : தொழில் போட்டி காரணமாக நிறுவனத்திற்குள் புகுந்து தாக்குதல்!

சென்னை : பார்த்தசாரதி கோயிலில் லட்சுமி நரசிம்ம பிரம்மோற்சவ விழா!

மேற்குவங்கம் – பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டம்!

ராமநாதபுரம் : அலட்சியமாக பதிலளிக்கும் வட்ட துணை அளவையர் – வீடியோ வைரல்!

சீனா : சவப்பெட்டியில் தாயை ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies