RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!
Oct 13, 2025, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடக மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சமி நில பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆயிரத்து 891 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ் அரசால் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலம், தீர்வை நிலம், கண்டிசன் நிலம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டன.

அத்தகைய பஞ்சமி நிலங்களைப் பட்டியலின சமூகத்தினரைத் தவிர்த்து வேறு எந்த சமூகத்தினரும் உரிமை கோர முடியாத அளவிற்கு அந்த காலத்திலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்காகத் தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட நிலையில், கோவையில் மட்டும் அத்தகைய நிலங்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பஞ்சமி நிலங்களைப் பாதுகாக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை இயற்றத் தயங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் தவறான தகவலை அளித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நான்காயிரம் ஏக்கர் மட்டுமே ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவரது வாரிசுதாரர்களிடம் இருக்கிறதா என்ற ஆய்வு நடத்திய போது தான் அந்நிலங்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் இருப்பதே தெரியவந்துள்ளது.

எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள நிலையில், பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பஞ்சமி நிலைச்சட்டத்தை இயற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: 000 acres of Panchami land encroached uponRTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்000 ஏக்கர் பஞ்சமி நிலம்10tamil nadu news todaytn news todayShocking information revealed in RTI: 10
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

Next Post

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!

Related News

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

அமெரிக்கா : பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies