மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக் கழக தேர்வுக்கான வினாத்தாளில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்கலைக் கழக துணைவேந்தரின் உருவ பொம்மையை எரித்துக் கண்டன முழக்கம் எழுப்பினர்.