கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1996ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக 158 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த டெய்லர் ராஜா என்பவரைத் தேடி வந்தனர்.
28 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த டெய்லர் ராஜா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். டெய்லர் ராஜா தனது 20 வயதிலேயே வெடிகுண்டு தயாரிப்பதில் சிறந்து விளங்கியது விசாரணையில் தெரியவந்தது.
அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்பது குறித்த விசாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான மனுவை வரும் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.