நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சி அருகே அக்னி சாஸ்தா கோயில் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.
இந்நிலையில், அக்னி சாஸ்தா கோயில் பகுதியில் கரடி மீண்டும் உலாவரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோயில் பகுதியில் சுற்றித்திரியும் கரடியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.