கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?
Aug 24, 2025, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

Web Desk by Web Desk
Jul 16, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது தண்டனை குறைக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இதற்கான காரணம் குறித்தும், வழக்கின் பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்..

2017ம் ஆண்டு ஏமனில் மயக்க ஊசி செலுத்தி தனது தொழில் கூட்டாளியைக் கொலை செய்தார் என்பதுதான் கேரள செவிலியர் நிமிஷா பிரியா மீதான குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக மரண தண்டனையைக்  கடைசி நேரத்தில் நிறுத்திவைத்துள்ளது ஏமன் அரசு….

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா.  அவர் ஏமன் தலைநகர் சனாவில் தலால் அப்து மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், மஹ்தியோ, கிளினிக்கின் உரிமம்,  நிமிஷா பிரியாவின் வருவாய், நகைகள், பாஸ்போர்ட் பேன்றவற்றை அபகரித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் இருந்து தப்பிக்கவும், பாஸ்போர்ட்டை மீட்கவும்  நினைத்த நிமிஷா, 2017ம் ஆண்டு மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். துரதிருஷ்டவசமாகக் கூடுதலாக மயக்க மருந்து செலுத்தியதில் மஹ்தி உயிரிழக்க நேரிட்டது. இந்த வழக்கில்  நிமிஷாவை ஏமன் நீதிமன்றம் குற்றவாளி என 2020ம் ஆண்டு அறிவித்தது. 2023ம் ஆண்டு அவரது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில்,  2025 ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஏமனில் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பத்தினரைக் குருதிப் பணம் எனப்படும் தொகையைப் பெற்றுக்கொண்டு நிமிஷா பிரியாவை மன்னிக்கச் செய்வதுதான், அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற ஒரே வழி.

இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிமிஷாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் போராடினர். முதற்கட்டமாக மரண தண்​டனையை தடுத்து நிறுத்​தக் கோரி, உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்த அவர்கள், நிமிஷாவின் உயிரைக் காப்​பாற்​ற 8 கோடியே 60 லட்சம் ரூபாய் குருதிப் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்​தப் பணத்தை மஹ்தி குடும்​பத்​தார் ஏற்​றுக்கொள்ளும் பட்சத்தில், நிமிஷாவின் தண்​டனை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நிமிஷாவின் மரண தண்டனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குருதிப் பணத்தை மஹ்தியின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்வார்களா? அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம்Kerala nurse's death sentence stayed: What is the background to the case?
ShareTweetSendShare
Previous Post

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

Next Post

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies