கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது தண்டனை குறைக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இதற்கான காரணம் குறித்தும், வழக்கின் பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்..

2017ம் ஆண்டு ஏமனில் மயக்க ஊசி செலுத்தி தனது தொழில் கூட்டாளியைக் கொலை செய்தார் என்பதுதான் கேரள செவிலியர் நிமிஷா பிரியா மீதான குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக மரண தண்டனையைக்  கடைசி நேரத்தில் நிறுத்திவைத்துள்ளது ஏமன் அரசு….

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா.  அவர் ஏமன் தலைநகர் சனாவில் தலால் அப்து மஹ்தி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், மஹ்தியோ, கிளினிக்கின் உரிமம்,  நிமிஷா பிரியாவின் வருவாய், நகைகள், பாஸ்போர்ட் பேன்றவற்றை அபகரித்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் இருந்து தப்பிக்கவும், பாஸ்போர்ட்டை மீட்கவும்  நினைத்த நிமிஷா, 2017ம் ஆண்டு மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார். துரதிருஷ்டவசமாகக் கூடுதலாக மயக்க மருந்து செலுத்தியதில் மஹ்தி உயிரிழக்க நேரிட்டது. இந்த வழக்கில்  நிமிஷாவை ஏமன் நீதிமன்றம் குற்றவாளி என 2020ம் ஆண்டு அறிவித்தது. 2023ம் ஆண்டு அவரது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில்,  2025 ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஏமனில் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பத்தினரைக் குருதிப் பணம் எனப்படும் தொகையைப் பெற்றுக்கொண்டு நிமிஷா பிரியாவை மன்னிக்கச் செய்வதுதான், அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற ஒரே வழி.

இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிமிஷாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் போராடினர். முதற்கட்டமாக மரண தண்​டனையை தடுத்து நிறுத்​தக் கோரி, உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்த அவர்கள், நிமிஷாவின் உயிரைக் காப்​பாற்​ற 8 கோடியே 60 லட்சம் ரூபாய் குருதிப் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். இந்​தப் பணத்தை மஹ்தி குடும்​பத்​தார் ஏற்​றுக்கொள்ளும் பட்சத்தில், நிமிஷாவின் தண்​டனை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நிமிஷாவின் மரண தண்டனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குருதிப் பணத்தை மஹ்தியின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்வார்களா? அவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Kerala nurse's death sentence stayed: What is the background to the case?கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம்
ShareTweetSendShare
Previous Post

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

Next Post

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies