அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், இறுதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்றும், அதன்பின்னர் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும், ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படலாம் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















