இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
1986 ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த தீரஜ் சேத், மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள கடக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். கவசப்படை அதிகாரியாக பணியை துவக்கிய அவருக்கு ராணுவத்தில் 40 ஆண்டு அனுபவம் உள்ளது.
ராணுவ தளபதியாக பதவி உயர்வு கிடைத்தும், அவர் தென் மேற்கு மற்றும் தெற்குப் படைப்பிரிவுகளின் தலைமை தளபதியாக பணியாற்றினார். இதன் மூலம் மேற்கு முனையில் இரண்டு படைப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
ராணுவத்தை நவீனமயமாக்கியதில் தீரஜ் சேத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த சூழலில், தற்போதைய தளபதியாக உள்ள உபேந்திர திவேதி, வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தளபதியாக தீரஜ் சேத் வரும் 30-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
















