வைகாசி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினத்தை ஒட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு புனித நீராடிவிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனைதொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
















