கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் கோரப்பட்டதால், திராவிட ஆட்சியாளர்கள் உருவாக்கிய நடைமுறை ஒழிந்ததாக ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி அம்மா உணவகங்களை மேம்படுத்தும் பணிக்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். 10 சதவீதம் வரை மதிப்பீடு குறைத்து, பலரும் டெண்டர் கோரி உள்ளனர்.
இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், ‘முந்தைய இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்த கமிஷன் முறை தற்போது அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது எனவும் கட்சியினர் யாரும் கமிஷன் கேட்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே டெண்டர் ஆவணங்கள் சரியாக இருந்தால், குறைந்தபட்ச ஒப்பந்தம் கோரும் ஒப்பந்ததாரருக்கு பணி கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
















