தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்வதாக தெரிவித்துள்ளார்..
தமிழகப் பெண்களைப் பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கியுள்ளோம் என முதல்வர் விஜய் மேடையெங்கும் பெருமை பேசி வரும் வேளையில், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருவது கொடூரமானது என்றும் கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளின் கூடாரமாகத் தமிழகம் உருமாறுவதை உடனடியாக தவெக அரசு தடுக்க வேண்டும் என்றும் ரீல்ஸ் வெளியிடுவதில் குதிரை வேகத்திலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஆமை வேகத்திலும் செயல்படுவதை விடுத்து, உடனடியாக தமிழகப் பெண்கள் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.
















