சிவகங்கை அருகே பெண் காவலருக்கு அவரது ஆண் நண்பர் உள்ளிட்ட மூவர் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த பெண் காவலருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தூதை கிராமத்தை சேர்ந்த ராபின் என்ற ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அழைத்ததன் பேரில், தனது இருசக்கர வாகனத்தில் பெண் காவலர் சென்றுள்ளார். அப்போது அங்கு ராபினின் நண்பர்களான சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
பின்னர் ராபினுடன் சேர்ந்து மூவரும் பெண் காவலரை பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த பெண் காவலர், பொதுமக்கள் உதவியுடன் 100 அவசர சேவைக்கு அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் காவலரை மீட்டனர். இதையடுத்து, அவரது நண்பர் ராபின், அவரது நண்பர்களான த.வெ.க வை சேர்ந்த மகாராஜா மற்றும் ஹரிஸ் ஆகியோரை பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின் ராபின், மகாராஜா மற்றும் கல்லூரி மாணவர் ஹரிஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
















