திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மேயர் பிரியா, திமுக கூட்டணியில் இருந்து சென்றவர்களை குறிப்பிட்டு,
திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார். தமிழக அரசு “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய மேயர் பிரியா, கடந்த காலங்களில் திமுக அரசு, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தவெக அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அதற்கு முன்னோடியாக திமுக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், பத்திரிக்கையாளர் தாக்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகி வருவதாகவும் மேயர் பிரியா குற்றம் சாட்டினார்.
















