அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு 6 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். இன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.தொடர்ந்து ஸ்லோவாக்கியா நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரான்ஸ் திரும்புகிறார். இந்நிலையில் நைஸ் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டு கலைஞர்கள் ஆடிய இந்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து இந்திய வம்சாவளியினரின் குழந்தைகளை பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார். அப்போது ஒரு சிறுவன் பிரதமரை கண்ட உற்சாகத்தில் அவரை கட்டியணைத்தான்.
















