கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரரின் காலில் விழுந்து தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆசிபெற்று, மலர்தூவி வாழ்த்தினார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், தனது வீர தீர செயலுக்காக குடியரசுத் தலைவரிடம் இருந்து கீர்த்தி சக்ரா விருது பெற்றார்.
இந்நிலையில், அவரது இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற கம்பம் தொகுதி தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். மேலும், வீர சாகசம் புரிந்த ராணுவ வீரரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
















