முதலமைச்சர் ஜோசப் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இருவருமே நேரில் ஆஜராகாததால், ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், இருவரும் காணொலி வாயிலாக ஆஜராகலாம் என கூறப்படுகிறது.
















