சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்ற நிலையில் த.வெ.க எம்.எல்.ஏ வர தாமதமானதால் ப.சிதம்பரம் காத்திருந்தது பேசு பொருளாகி உள்ளது.
மத்திய அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் திருப்புவணம் அருகேவுள்ள பூவந்தியில் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 13 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன்கடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், மானாமதுரை த.வெ.க எம்எல்ஏ இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு 5 நிமிடம் முன்னதாகவே ப.சிதம்பரம் வருகை தந்த நிலையில் எம்.எல்.ஏ. இளங்கோவன் 20 நிமிடங்கள் தாமதமாகவே வருகை தந்தார். இதனால் ப.சிதம்பரம் 20 நிமிடங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. த.வெ.க எம்.எல்.ஏவிற்காக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் காத்திருந்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.
















