செங்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் செயின்ட் மேரிஸ் பாரா மெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2024-ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாணவி பயின்று வந்தார். இந்த மாணவிக்கு கல்லூரியின் தாளாளரான பினு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கேரள மாணவி படிப்பை முடித்த பிறகும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாரளித்தனர். இதையடுத்து தனியார் கல்லூரி தாளாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே நெஞ்சுவலி ஏற்பட்டதாக தாளாளர் கூறியதால் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
















