சபரிமலை கோயிலில் இருமுடி கட்டி வந்து பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம் செய்தார்
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து கடுமையான விரத முறைகளை பின்பற்றுவது வழக்கமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி தனது மனைவி சௌமியா உடன் இணைந்து இருமுடிக்கட்டி மலையேறி சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார். சபரிமலை சன்னிதானத்தில் சிறப்பு வழிபாடு நடத்திய அன்புமணிக்கு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
















