கும்மிடிப்பூண்டி சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஸ்டான்லி மருத்துவமனைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
















