பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 உச்சிமநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்துக்கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் இவியான் நகரில் ஜி-7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் இத்தாலி, கனடா, பிரிட்டன், ஜப்பான் நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரை கைக் குலுக்கியும், அன்போடு தட்டிக்கொடுத்தும் உரையாற்றினார். இவர்களின் இந்த சந்திப்பு 16 மாதங்களுக்கு பின் நடந்துள்ள நிலையில் ஜூன் 17ம் தேதி முழுமையான இருதரப்பு சந்திப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















