மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் இவியான் நகரில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டை யொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகத் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது , அமெரிக்க ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமிகள் குறித்து பேசினார். ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டிய அவர், கடல் வணிகப் பாதைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடல் வழித்தடங்கள் பாதுகாப்பாக இருப்பதையும், மாலுமிகள் அச்சமின்றி தங்கள் பணியைச் செய்ய முடிவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்த மோதல், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகளில் உயிர் பலிகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
















