தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 15 ஆயிரத்து 32 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
மின் தடைகளுக்கு நிரந்தர தீர்வுகாண சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் இரண்டாயிரத்து 275 கோடிமதிப்பில் மின்விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
மின் பழுதுகளைச் சரிசெய்ய 15 ஆயிரத்து 58 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ. 10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க மையங்கள், 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள்,
125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















