விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!
Jul 17, 2025, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூமியிலேயே மிகவும் ஆபத்தான கொடிய தீவு ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. மனிதர்களே இல்லாத அந்தத் தீவுக்குச் செல்ல கடற்படையின கூட நடுநடுங்கிப் போவார்கள்.. அப்படி என்ன தீவு பார்க்கலாம் விரிவாக..

பிரேசிலின் சா பாவ்லோ நகரின தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த தீவுதான் உலகின் மிகவும் ஆபத்தான தீவு என்று வர்ணிக்கப்படுகிறது. அதன் பெயரை இல்ஹா டா குயிமாடா கிராண்டே எனக் கூறுவதை விடப் பாம்புத் தீவு என்றால்தான் அதன் வீரியம் நமக்குப் புரியும்.

அடர்ந்த மரங்கள், கரடு முரடான பாறைகள் கொண்ட இந்த கொடிய தீவு 4000 விஷ பாம்புகளின் கூடாரமாக உள்ளது. தங்க நிறத்தில் ஈட்டி போன்ற தலையைக் கொண்ட இப்பாம்புகள் தங்க ஈட்டித் தலை பாம்புகள் என்ற பெயரைப் பெற்றன. அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு,  11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததன் காரணமாகப் பிரேசிலில் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

பாலூட்டிகள், வேட்டை விலங்குகள் இல்லாமல் பிரிந்த இந்த தீவு ஆயிரக்கணக்கான தங்க ஈட்டித் தலை பாம்புகளின் வசிப்பிடமாகவே மாறிவிட்டது, மரத்தில் சர்ரென ஏறும் இவ்வகை பாம்புகள், கொடிய விஷத்தின் மூலம் பறவைகளை இரையாக்கிப் பசியாறுகின்றன.

தங்க ஈட்டித் தலை பாம்புகள், சாதாரண விஷ பாம்புகளை விட 5 மடங்கு கொடிய விஷம் கொண்டவை. மரத்தின் உச்சிக்குச் சென்று காத்திருக்கும் இவ்வகை பாம்புகள் இளைப்பாற வரும் சிலியன் எலினேனியா என்ற பறவைகளை இரையாக்குகிறது. ஒரே கடியில் இந்தப் பாம்புகள் வெளிப்படுத்தும் விஷம், சிறுநீரகம் செயலிழப்பு, உடலுக்குள் ரத்தக்கசிவு, திசு நசிவை ஏற்படுத்திவிடும்.

இங்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சதுர மீட்டாருக்கு ஒரு பாம்பு என்ற அளவில் இருக்கும் இந்த தீவில், பாம்பு கடித்தால் அவசரக் காலங்களில் மீட்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது என்பதால்.மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இத்தீவுக்குச் செல்ல வேண்டுமெனில் உரிய அனுமதி பெற்றுத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள், விஷ முறிவு மருந்துகள், மருத்துவ உதவியாளர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் உள்ளன.

எனினும், சட்டவிரோத வேட்டை கும்பல் மற்றும் இனப்பெருக்கமின்மை போன்ற காரணங்களால், தங்க ஈட்டித் தலை பாம்புகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. பாம்புத் தீவுக்கே பயத்தைக் காட்டியுள்ள சட்டவிரோத வேட்டை கும்பல் உண்மையில் பாம்பைக் காட்டிலும், கொடிய விஷம் கொண்டவர்கள்தான்.

Tags: today newsHomeland of poisonous snakes: The most terrifying island on Earthபூமியின் கொடிய தீவுவிஷ பாம்புகளின் தாயகம்
ShareTweetSendShare
Previous Post

வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்!

Next Post

NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

AI மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு : கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்!

இங்கிலாந்து, ஆப்கான் மக்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறோம் – பிரிட்டன்

சீனாவில் மீன் தொட்டி போல் மாறிய கார்!

Load More

அண்மைச் செய்திகள்

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சென்னை விம்கோ நகரில் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகக்கூறி பயணிகள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – திருச்சி சிவாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

ஜெயலலிதா மறைந்த பின் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

டெய்லர் ராஜாவை 5 நாட்கள் போலீஸ் காவல் : கோவை 5-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி!

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies