தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில்வராத 2 கோடியே 67 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலாள நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு எதிராக விசாரணையை தொடங்கியுள்ள அமலாக்கத்துறை 34 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்நிலையில், செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.