திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவைத் தாக்கிய புயலால் நியூயார்க், நியூஜெர்சி நகரங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் வெள்ளமாகக் காட்சியளிக்கும் நிலையில், இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் நிவாரண பணிகளும் தொடங்கியுள்ளன.

கடலில் மிதக்கும் படகுகள் போன்று தத்தளிக்கும் வீடுகள்…. காகிதக் கப்பல் போன்று மூழ்கிய வாகனங்கள்… ரயில் நிலையங்களில் நீரூற்று போன்று பெருக்கெடுத்த வெள்ளம்….என அமெரிக்காவைத் தாக்கிய புயல் தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சிக்கிய 131 பேர் பலியான நிலையில், 97 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தொடரும் நிலையில். புயலின் தாக்கத்தால் நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.

நியூயார்க் நகரில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  ஒரே மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விரைவு சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. ரயில் நிலையங்களில் 4.5 சென்டி மீட்டர் மழை அளவுக்கே கட்டமைப்பு வசதி உள்ளதாகக் கூறும் அதிகாரிகள், இவ்வளவு மழை பெய்யும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று புலம்பினர்.

நியூ ஜெர்சியில்  2 மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், குடியிருப்பு பகுதிகள். வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

பிளேன்ஃபீல்ட் பகுதியில் வாகனம் ஒன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடியாத நிலையில் நியூஜெர்சியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags: America in turmoil: Floods are flooding in every directionதிக்குமுக்காடும் அமெரிக்காபெருக்கெடுத்த வெள்ளம்!
ShareTweetSendShare
Previous Post

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

Next Post

“சீனாவை பார்த்து படிக்க வேண்டிய நேரம் இது” – ஸ்ரீதர் வேம்பு அதிரடி X பதிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies