காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தமிழக அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர். உத்திரமேரூர் பேரூராட்சி மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்துகொடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அதிமுகவினர், அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.