நேதாஜி குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது - அண்ணாமலை
Jul 21, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேதாஜி குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 21, 2025, 08:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜி குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாரத் நேதாஜி அறக்கட்டளை தொடக்க விழாவில் இதுகுறித்து அவர் பேசியதை தற்போது பார்க்கலாம்.

திருப்பூரில் நடைபெற்ற பாரத் நேதாஜி அறக்கட்டளை தொடக்க விழாவில் இளைஞர்கள் பொது வாழ்க்கைக்கு எப்போது வர வேண்டும் என்ற தெளிவை பெறுங்கள் எனும் தலைப்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரத் நேதாஜி அறக்கட்டளை தொடக்க விழா  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

மேலும் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் மற்றும் மாவட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அறக்கட்டளையின் மூலமாக இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்தல் தேசபக்தி குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மற்றும் சமூக சிந்தனைகளை இளைஞர்களுக்கு கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே பேசிய அண்ணாமலை நேதாஜி குறித்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. நேதாஜி குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது.
மகாத்மா காந்தி அளவுக்கு நேதாஜியின் சரித்திரம் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

மெரினா பீச்சில் தலைக்கு ஒன்று காலுக்கு ஒன்று என ஏசி வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆயிரம் தென்னை மரத்தில் 10 தென்னை மரத்தை அகற்றிவிட்டு கள்ளுக்கடை போராட்டம் செய்தவர்கள், 1000 பேர் கோவில் திறந்த பின்னர் கோவில் திறந்தவர்கள் எல்லாம் தற்போது தலைவர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள்.

குடும்பம், வேலை, வருமானம் உள்ளிட்டவற்றை முடித்த பின்னரே பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும் . ஆனால் அரசியல் கட்சிகள் இன்று முழு நேர உழைப்பவர்களை எதிர்பார்க்கிறார்கள். முழு நேர அரசியல்வாதிகள் வந்த பின்னர் தான் தவறுகள் அதிகரித்து விட்டது என்றும் அவர் கூறினார்.

வேகமாக வளரும் நாட்டில் நீங்கள் நல்ல முறையில் சம்பாதிக்க வேண்டும் என்றும், களத்தில் வந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ஆண்டு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு கோவையில் ஒரு ஆண்டு வேலை செய்தேன். அந்த சம்பளத்தில் வீட்டு வாடகை பெட்ரோல் என அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எந்த கோவிலில் என்ன அன்னதானம் என் செந்தில் சொல்வது போல் எந்த ஹோட்டலில் எந்த உணவு விலை குறைவு என அறிந்து வைத்திருப்பேன். அந்த ஒரு வருடம் என் வாழ்வில் சிறந்த ஆண்டு. என்னை செதுக்கியது அந்த 12 மாதங்கள் தான் என்றும் கூறினார்.

டீ கடையில் அமர்ந்து அம்பானி அப்படி இப்படி என பேசுகிறார்கள் ஆனால் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அம்பானி ஆண்டுக்கு வரி செலுத்துகிறார். நீங்களும் சம்பாதிக்க வேண்டும் என்றால் சம்பாதியுங்கள் அதில் எந்த தவறும் இல்லை. உங்கள் தேவையை உணர்ந்து தெளிவோடு இங்கிருந்து செல்லுங்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: annamalai speechMajor MadankumarBharat Netaji FoundationFormer BJP state president Annamalai
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை!

Next Post

கோவை சோமனூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா!

Related News

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென்காசியில் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்ரீதர் வேம்பு!

அதிமுக உட்கட்சி விவகாரம் : விரைவாக விசாரித்து முடிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வங்கதேசம் : கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் – 19 பேர் பலி!

எந்தவொரு விவாதத்தில் இருந்தும் ஓடி போக மாட்டோம் – ஜே.பி.நட்டா

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்!

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு மனு தாக்கல்!

மும்பை ரயில் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த விவகாரம் : குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உயர்நீதிமன்றம்!

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : கராத்தே தியாகராஜன்

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு!

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!

கர்நாடகா : ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies