உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞரை, ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் தாக்கிய சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கும், மகாராஜன் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ராமகிருஷ்ணனை, ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.