வங்கதேசத்தில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து உத்தாரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கியது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.