ஊழல் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் தான், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக எண்ணக் கூடாது என்று நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய நீதிபதி விவேக் குமார் சிங், இந்த இடமாற்றத்தில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், நல்ல நினைவுகளுடன் மத்திய பிரதேசம் செல்வதாகவும் தெரிவித்தார்.