ஆப்கானிஸ்தானில் ஆடை கட்டுப்பாடுகளை மீறியதாகப் பெண்கள் மற்றும் சிறுமியரை தலிபான்கள் கைது செய்வதற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அடக்குமுறைகள், பெண்கள், சிறுமியர்கள் மேலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வழிவகுப்பதுடன், அவர்களைத் தைரியம் இழந்தவர்களாக மாற்றும் என ஐநா தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யும்படி, தலிபான் அரசை ஐநா வலியுறுத்தி உள்ளது.