உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
சவான் மாதத்தை முன்னிட்டு ஹரித்வார் கங்கை நதியில் கன்வர் யாத்ரீகர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் சவான் சிவராத்திரி மற்றும் கன்வர் யாத்திரையின் இறுதி நாளையொட்டி ஹரித்வாரில் ஏராளமான யாத்ரீகர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.