திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகளை மறைத்து ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் புரூஸ் தரப்பில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதால், பின்னர் வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதையடுத்து, தேர்தலில் ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்புமனுவுடன், சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.