கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!
Mar 15, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Murugesan M by Murugesan M
Jul 27, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழமன்னர்களின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்த பேரரசர் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பாண்டில் கொண்டாடப்படுகிறது. சோழர்களின் கட்டட கலைக்கு உதாரணமாகத் திகழும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் குறித்தும் அதில் அடங்கியிருக்கும் வரலாறுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயர் படைகளின் அட்டூழியம் ஆகியவற்றிற்கு மத்தியில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னதமான தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் அங்கே இருந்ததற்கான அடையாளமாக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில், ராஜேந்திர சோழனால் கட்டப்படும் போதும் எத்தகைய பிரம்மிப்புடன் காணப்பட்டதோ அதில் துளியளவும் குறைவில்லாமல் இன்றளவும் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டாலும் பல்வேறு வகையிலும் மாறுபட்டதாகவும் காணப்படுகிறது

கிழக்கு நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் நம் கண்களுக்குத் தென்படும் நந்தி பகவான், பிரம்மாண்டமான மூல மூர்த்திகள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள் ஆகியவை இது வெறும் கோவில் அல்ல வரலாற்றுக் காவியம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிவலிங்கம் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜன் சோழனும், ராஜேந்திர சோழனும் சிவபெருமான் மீது கொண்டிருந்த தீராத அன்பே இத்தகைய பிரம்மாண்ட கோயில் கட்டப்படுவதற்கான அடிப்படை காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்

கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் கலைநயமிக்க விநாயகர், நடராஜர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தென்புற நுழைவாயிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் அற்புதமான சிலை காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்படையையும், எதிரிகளையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து பல நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தாலும் எளிமையுடனே வாழ்ந்த ராஜேந்திர சோழனின் வாழ்க்கையையே அந்த சிலையும் உணர்த்துகிறது.

சாளுக்கிய மன்னர்களை வெற்றிபெற்ற பின் ராஜேந்திர சோழன் கட்டிய துர்க்கை அம்மன் கோயில் இன்றளவும் கட்டடக் கலையில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்து வரலாற்றை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

சோழ மன்னர்களின் வரலாற்றில் சுமார் 250 ஆண்டுகள் சீரோடும், சிறப்போடும் பரபரப்பான தலைநகரமாக இயங்கிய கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால்  மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags: Gangaikonda Cholapuram Temple: Historical evidence of Chola architectureசோழர்களின் கட்டிடக்கலைக்கு வரலாற்று சான்றுகங்கை கொண்ட சோழபுரம் கோயில்சோழபுரம் கோயில்
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

Next Post

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies