கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!
Jul 30, 2026, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Murugesan M by Murugesan M
Jul 27, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோழமன்னர்களின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்த பேரரசர் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பாண்டில் கொண்டாடப்படுகிறது. சோழர்களின் கட்டட கலைக்கு உதாரணமாகத் திகழும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் குறித்தும் அதில் அடங்கியிருக்கும் வரலாறுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயர் படைகளின் அட்டூழியம் ஆகியவற்றிற்கு மத்தியில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னதமான தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் அங்கே இருந்ததற்கான அடையாளமாக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில், ராஜேந்திர சோழனால் கட்டப்படும் போதும் எத்தகைய பிரம்மிப்புடன் காணப்பட்டதோ அதில் துளியளவும் குறைவில்லாமல் இன்றளவும் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டாலும் பல்வேறு வகையிலும் மாறுபட்டதாகவும் காணப்படுகிறது

கிழக்கு நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் நம் கண்களுக்குத் தென்படும் நந்தி பகவான், பிரம்மாண்டமான மூல மூர்த்திகள், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள் ஆகியவை இது வெறும் கோவில் அல்ல வரலாற்றுக் காவியம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.

60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிவலிங்கம் தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கமாக அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜன் சோழனும், ராஜேந்திர சோழனும் சிவபெருமான் மீது கொண்டிருந்த தீராத அன்பே இத்தகைய பிரம்மாண்ட கோயில் கட்டப்படுவதற்கான அடிப்படை காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்

கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் கலைநயமிக்க விநாயகர், நடராஜர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தென்புற நுழைவாயிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் அற்புதமான சிலை காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்படையையும், எதிரிகளையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து பல நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்திருந்தாலும் எளிமையுடனே வாழ்ந்த ராஜேந்திர சோழனின் வாழ்க்கையையே அந்த சிலையும் உணர்த்துகிறது.

சாளுக்கிய மன்னர்களை வெற்றிபெற்ற பின் ராஜேந்திர சோழன் கட்டிய துர்க்கை அம்மன் கோயில் இன்றளவும் கட்டடக் கலையில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்து வரலாற்றை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

சோழ மன்னர்களின் வரலாற்றில் சுமார் 250 ஆண்டுகள் சீரோடும், சிறப்போடும் பரபரப்பான தலைநகரமாக இயங்கிய கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால்  மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags: Gangaikonda Cholapuram Temple: Historical evidence of Chola architectureசோழர்களின் கட்டிடக்கலைக்கு வரலாற்று சான்றுகங்கை கொண்ட சோழபுரம் கோயில்சோழபுரம் கோயில்
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

Next Post

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies