பெங்களூரு விமான நிலைய ஓட்டலில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.
தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர், அங்குள்ள புகழ்பெற்ற ஓட்டலில் வெண் பொங்கல் வாங்கியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பொங்கலில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்த அவர், ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.