ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரைக் கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி, முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் எட்டி உதைத்துத் தாக்குதல் நடத்தியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மெல்போர்னின் போர்னியா பகுதியில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் அந்த கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது.