நாடாளுமன்றம் முடக்கம் - 2 நாளில் ரூ.25 கோடி வீண் - மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!
Sep 11, 2025, 09:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்தவிடாமல் முடக்கி வரும் எதிர்க்கட்சிகளால், 2 நாளில் மட்டும் 25 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தொடரை நடத்த ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியாலும், கூச்சல், குழப்பத்தாலும் இருஅவைகளும் அடுத்தடுத்து முடங்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் உள்ளிட்டவை குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, உரிய நேரத்தில் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று கூறியது… அதன்படி 29ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடத்தவும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது அவை நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு,  நாடாளுமன்றம் நடைபெறுவதற்கான நோக்கத்தையே சிதைக்கிறது.  அதுமட்டுமின்றி மக்கள் வரிப்பணத்தையும் வீணாக்கி வருகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த நிமிடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படும் நிலையில், அவை நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டதால்,  2 நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவையும், மாநிலங்களவையும் நாள் ஒன்றுக்கு தலா ஆறு மணி நேரம் நடத்தப்படுவதாகக் கணக்கிட்டால், மூன்று நாட்களுக்கு 18 மணி நேரம் அல்லது ஆயிரத்து 80 நிமிடங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களவை 3 நாட்களில் மொத்தமே 264 நிமிடங்கள் தான் நடந்திருக்கிறது. மக்களவையோ ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக மொத்தமே 54 நிமிடங்கள் மட்டும்தான் நடைபெற்றிருப்பது பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மக்களின் நம்பிக்கை, விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படாத எம்.பி.,க்கள், தெருமுனையில் போராட்டம் நடத்துவதைப் போன்று செயல்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா கவலை தெரிவித்திருந்தார். ஒருபுறம் விவாதம், மறுபுறம் அமளி என இரட்டை நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகள்,நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில்  கண்டித்திருந்தார்.

எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற செயலால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது. அவர்களை நம்பி வாக்களித்த சாதாரண மக்களுக்கு எந்தவித பலனும் சென்று சேராமல் போய்விடுகிறது.  மக்கள் நலனைப் புறந்தள்ளாமல் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் பங்கேற்று, மக்களின் குரலாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Tags: Parliament shutdown - Rs. 25 crore wasted in 2 days - Opposition parties wasting public moneyநாடாளுமன்றம் முடக்கம்2 நாளில் ரூ.25 கோடி வீண்today parliment news
ShareTweetSendShare
Previous Post

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Next Post

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies