நாடாளுமன்றம் முடக்கம் - 2 நாளில் ரூ.25 கோடி வீண் - மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்தவிடாமல் முடக்கி வரும் எதிர்க்கட்சிகளால், 2 நாளில் மட்டும் 25 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தொடரை நடத்த ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியாலும், கூச்சல், குழப்பத்தாலும் இருஅவைகளும் அடுத்தடுத்து முடங்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் உள்ளிட்டவை குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, உரிய நேரத்தில் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று கூறியது… அதன்படி 29ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடத்தவும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது அவை நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு,  நாடாளுமன்றம் நடைபெறுவதற்கான நோக்கத்தையே சிதைக்கிறது.  அதுமட்டுமின்றி மக்கள் வரிப்பணத்தையும் வீணாக்கி வருகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த நிமிடத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படும் நிலையில், அவை நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டதால்,  2 நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவையும், மாநிலங்களவையும் நாள் ஒன்றுக்கு தலா ஆறு மணி நேரம் நடத்தப்படுவதாகக் கணக்கிட்டால், மூன்று நாட்களுக்கு 18 மணி நேரம் அல்லது ஆயிரத்து 80 நிமிடங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களவை 3 நாட்களில் மொத்தமே 264 நிமிடங்கள் தான் நடந்திருக்கிறது. மக்களவையோ ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக மொத்தமே 54 நிமிடங்கள் மட்டும்தான் நடைபெற்றிருப்பது பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

மக்களின் நம்பிக்கை, விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படாத எம்.பி.,க்கள், தெருமுனையில் போராட்டம் நடத்துவதைப் போன்று செயல்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா கவலை தெரிவித்திருந்தார். ஒருபுறம் விவாதம், மறுபுறம் அமளி என இரட்டை நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகள்,நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அண்மையில்  கண்டித்திருந்தார்.

எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற செயலால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது. அவர்களை நம்பி வாக்களித்த சாதாரண மக்களுக்கு எந்தவித பலனும் சென்று சேராமல் போய்விடுகிறது.  மக்கள் நலனைப் புறந்தள்ளாமல் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் பங்கேற்று, மக்களின் குரலாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Tags: Parliament shutdown - Rs. 25 crore wasted in 2 days - Opposition parties wasting public moneyநாடாளுமன்றம் முடக்கம்2 நாளில் ரூ.25 கோடி வீண்today parliment news
ShareTweetSendShare
Previous Post

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Next Post

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies