ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?
Jul 26, 2025, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Web Desk by Web Desk
Jul 25, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி சொற்ப விலைக்குத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் செல்வந்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகள் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளிலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறுமை, போதுமான வேலைவாய்ப்பின்றி தவித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி  வைத்து, அவர்களின் சிறுநீரகத்தைத் திருடி விற்பனை செய்யும் சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை தருகிறோம் என வாக்குறுதியளித்து தங்களின் வேலை முடிந்த பின்பு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் மட்டுமே தந்திருப்பதும்  வெளிவந்துள்ளது.

இதுவரை சுமார் 100க்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்டதில் திமுக நிர்வாகி ஆனந்தன் என்பவர் தான் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

வருமானமின்றி தவித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களை, குறிப்பாகப் பெண்களின் சிறுநீரகம் தான் அதிகளவு திருடப்பட்டுள்ளது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி அதனைச் செலுத்த முடியாத தொழிலாளர்களை அழைத்துப் பேசி, லட்சக்கணக்கில் பணம் தருகிறோம் என ஆசை காட்டி அவர்களின் கிட்னியை திருடியதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் திருச்சி சிதார் ஆகிய இரண்டு மருத்துவமனைகள் தான் பெரும்பங்கு வகித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திமுக மண்ணச்சநல்லூர் எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமானது என்பதால் அவருக்கும் இதில் தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உடல் உறுப்புகள் திருட்டு என்பது உலகாளவிய பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மருத்துவமனையிலேயே நடைபெற்றிருக்கும் அத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஏழை, எளிய மக்களிடம் இருந்து சொற்பத் தொகைக்குத் திருடப்படும் சிறுநீரகங்கள், பல கோடி ரூபாய் கூட தர முன்வரும் செல்வந்தர்களுக்குப் பொருத்தப்படுவதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கான பணப்புழக்கம் நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு மருத்துவமனைகள் மட்டுமன்றி ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிறுநீரகங்கள் திருடப்பட்டு, வெளிநாட்டினருக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏழை, எளிய மக்களிடம் இருந்து சட்டவிரோதமாகத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் யார் யாருக்குப் பொருத்தப்பட்டுள்ளது? எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது? உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான விதிமுறைகளை மீறித் தான் பொருத்தப்பட்டதா? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் விசாரணையை முடித்துவிடாமல் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: விற்கு தொடர்பா?நாமக்கல்லில் சிறுநீரக திருட்டுIs it related to DMK MLA?: Kidney theft taking advantage of povertyதிமுக எம்எல்ஏ.
ShareTweetSendShare
Previous Post

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Next Post

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies