ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?
Jan 14, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Murugesan M by Murugesan M
Jul 25, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி சொற்ப விலைக்குத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் செல்வந்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகள் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளிலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறுமை, போதுமான வேலைவாய்ப்பின்றி தவித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி  வைத்து, அவர்களின் சிறுநீரகத்தைத் திருடி விற்பனை செய்யும் சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை தருகிறோம் என வாக்குறுதியளித்து தங்களின் வேலை முடிந்த பின்பு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் மட்டுமே தந்திருப்பதும்  வெளிவந்துள்ளது.

இதுவரை சுமார் 100க்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்டதில் திமுக நிர்வாகி ஆனந்தன் என்பவர் தான் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

வருமானமின்றி தவித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களை, குறிப்பாகப் பெண்களின் சிறுநீரகம் தான் அதிகளவு திருடப்பட்டுள்ளது. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி அதனைச் செலுத்த முடியாத தொழிலாளர்களை அழைத்துப் பேசி, லட்சக்கணக்கில் பணம் தருகிறோம் என ஆசை காட்டி அவர்களின் கிட்னியை திருடியதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் திருச்சி சிதார் ஆகிய இரண்டு மருத்துவமனைகள் தான் பெரும்பங்கு வகித்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திமுக மண்ணச்சநல்லூர் எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமானது என்பதால் அவருக்கும் இதில் தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உடல் உறுப்புகள் திருட்டு என்பது உலகாளவிய பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மருத்துவமனையிலேயே நடைபெற்றிருக்கும் அத்தகைய திருட்டு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஏழை, எளிய மக்களிடம் இருந்து சொற்பத் தொகைக்குத் திருடப்படும் சிறுநீரகங்கள், பல கோடி ரூபாய் கூட தர முன்வரும் செல்வந்தர்களுக்குப் பொருத்தப்படுவதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கான பணப்புழக்கம் நடைபெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு மருத்துவமனைகள் மட்டுமன்றி ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிறுநீரகங்கள் திருடப்பட்டு, வெளிநாட்டினருக்குப் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏழை, எளிய மக்களிடம் இருந்து சட்டவிரோதமாகத் திருடப்பட்ட சிறுநீரகங்கள் யார் யாருக்குப் பொருத்தப்பட்டுள்ளது? எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது? உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான விதிமுறைகளை மீறித் தான் பொருத்தப்பட்டதா? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தனலட்சுமி சீனிவாசன் மற்றும் சிதார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் விசாரணையை முடித்துவிடாமல் சிறுநீரக திருட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Is it related to DMK MLA?: Kidney theft taking advantage of povertyதிமுக எம்எல்ஏ.விற்கு தொடர்பா?நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Next Post

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies