உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியானது.