திருச்செந்தூர் - சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!
Jan 14, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 27, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து சென்னை மற்றும் பழனி செல்லும் இரயில்களில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் போதுமான இருக்கைகள் கிடைப்பதில்லை.  இதனால பக்தர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக முன் தமிழ் ஜனம் தொலைக்காட்யில் செய்தி வெளியானது.

இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.17.5 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை தென்னக இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடந்து வரும் அம்ரித் பாரத் திட்ட பணிகளில் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை மற்றும் குளிர்சாதன காத்திருப்போர் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் அனைத்தும் அக்டோபர் 15-ந் தேதிக்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

திருச்செந்தூர் முதல் நெல்லை வரை இரயில் நடைபாதை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அப்பணிகள் நிறைவேற்றவுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றார்.

அதே போல் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட அனைத்து ரெயில்களுக்கும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை இயக்குவதற்கான திட்டம் தற்போதுவரை இல்லை என தெரிவித்த அவர் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அம்ரித் பாரத் பணிகள் நிறைவுபெற்றதும் கூடுதல் இரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags: Tiruchendur to Chennai trainsadditional coachesTiruchendur railway stationAmrit Bharat schemeSouthern Railway General Manager R.N. Singh
ShareTweetSendShare
Previous Post

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Next Post

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies