சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் : ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை!
Jul 28, 2025, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் : ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று எனவும் புகழாரம் சூட்டினார்.

ராஜேந்திர சோழனின் 1005வது பிறந்தநாள் விழா. கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டத் துவங்கியதன் ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்ததன் ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தபடி கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ மண்டலம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

இளையராஜாவின் இசையில் ஒலித்த சிவபக்தி பாடல்களைக் கேட்டுப் பரவசமடைந்ததாகப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்த இடத்தில், எனது சகாவான இளையராஜாவின் சிவபக்தி, இந்த மழைக்காலத்தில் மிகவும் பக்தி நிரம்பியதாக இருந்தாகக் கூறினார்.

சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறும், பாரம்பரியமும் பாரதத்தின் மெய்யான பிரகடனங்கள் என்று கூறிய பிரதமர் மோடி, சோழ சாம்ராஜ்யத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று என்று தெரிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறை வாயிலாக ஜனநாயக வழிமுறைப்படி தேர்தல்கள் நடந்ததைக் குறிப்பிட்ட அவர், சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

சோழப் பேரரசர்கள் பாரதத்தின் கலாச்சார சிற்பிகள் என்று கூறிய பிரதமர் மோடி, அதனால்தான் இன்றும்கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில் தமிழ்நாடு மிகவும் முக்கியமானதாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். திருமூலர் உரைத்த அன்பே சிவம் என்ற கோட்பாட்டை கடைப்பிடித்தால், பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்துவிடும் என்றும் கூறினார். இதைத்தான் பாரதம் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆப்ரேஷன் சிந்தூர் என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் உதாரணம் என்றும் தெரிவித்தார்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும் கூட, அதன் கோபுரத்தைத் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயக் கோபுரத்தை விடக் குறைவானதாக வைத்ததற்குத் தந்தை மீது கொண்டு பற்றுதலே காரணம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் முதலாம் ராஜேந்திரசோழனுடைய பிரமாண்ட உருவச்சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

விழாவில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் ஷெகாவத், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர்,  எம்.பி.,  திருமாவளவன்,  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Tags: பிரதமர் மோThe rule of the Cholas was the mother of democracy: A grand statue of Rajaraja Chola and Rajendra Cholaதமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கும்ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை
ShareTweetSendShare
Previous Post

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Next Post

பிரதமரின் நிகழ்ச்சிக்கு பிறகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

ஆலோசனை கூட்டத்தில் கண் கலங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்!

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : சிம்மவாஹினி கோயிலில் பி.வி.சிந்து நேர்த்திக்கடன்!

நிறைப்புத்தரிசி பூஜை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

தெலங்கானா : பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

துருக்கி காட்டுத்தீ!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!

ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!

மு.க.முத்து மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies