பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென ஒரு டயர் வெடித்த நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.