ஈரோட்டில் உள்ள மாவட்ட சிறையில் காவலர் மீது எழுந்த புகாரையடுத்து அங்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சிறைக்காவலர் ஒருவர் கைதிகளின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தொல்லை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் புகார் எழுந்ததை அடுத்து கோவையிலிருந்து வந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.